Wednesday, April 11, 2018

கவிதையை நிறைவு செய்யலாமே

போர்க்களமென
இதிகாச காலங்களில்
ஓரிடமிருந்தது
வீரர்கள் மட்டும் தம் வீரம் காட்டும்
ஒரு பெரும் மைதானமாய்...

இன்று போல்
எந்த விதத்திலும் காரணமாகாத
வெகு ஜனங்கள்
வாழும் பகுதியாய் அல்லாமல்

வீரர்களென
மன்னர் காலம் வரை
மனிதர்கள் இருந்தார்கள்
நேருக்கு நேர் நின்று போர்புரிதலே
வீரத்திற்கு இலக்கணமென

இன்றுபோல்
எங்கிருந்தோ நள்ளிரவில்
எவரோ குண்டுமழை
பொழிதல் போலல்லாமல்..

மன்னர்களென
ஒரு குடும்பமே தொடர்ந்து
நாட்டை ஆண்டுவந்தது
மக்களுக்காக வாழ்வதே
தமக்கான பணியென்று குழப்பமில்லாமல்

இன்றுபோல்
தம் குடும்ப நலன் காக்க
தம் குடும்பமே பதவியில் தொடரவேண்டும்
என்னும் சுய நலம் போலல்லாமல்

இவை அனைத்திற்கும் காரணம்...

(அவரவருக்குத் தோன்றும் காரணங்களை
சுருக்கமாய்ப் பதிவு செய்து
கவிதையை நிறைவு செய்யலாமே )

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என பலப்பல ஆசைகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பணம்... பணம்... பணம்...

G.M Balasubramaniam said...

என்ன எழுதி என்ன பயன் பின்னூட்டத்தில்தான் காணப்பொவதில்லையே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாம்தான்.

Yarlpavanan said...

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Post a Comment