Wednesday, January 8, 2020

முரண்....

தனியார்மயமாக்களுக்கு எதிரான
போராட்டத்திற்கு
ஆதரவு தேடும் நிமித்தம் அவர்கள்
முக நூல் டுவிட்டர்  பிளாக்கர் என
அத்தனை பிரச்சார வாய்ப்புகளையும்
பயன்படுத்த முயன்றார்கள்

ஆயினும்
தனியார் வசம் இருந்த
நெட் ஒர்க்குகள் பயன்பட்ட அளவு
விசுவாசமாக வைத்திருந்த
பி.எஸ் என் எல்.
கைகொடுக்கவில்லை..

ஆகவே பாவம்
தனியார் தயவினாலேயே அவர்கள்
தனியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மாவட்டத் தலைவர்களை
முடிக்கிவிட பயணப்பட்ட
,மாநிலத்தலைவர்களுக்கு
வசதியான குளிரூட்டப்பட்ட
தனியார் பேருந்துகள்
கொடுத்த சுகப் பயணத்தை
அரசுப் பேருந்துகள் தர இயலாததால்
தலைவர்களால்  பாவம் அதையும்
பயன்படுத்த இயலவில்லை...

ஆகவே பாவம்
தனியார் உதவியுடனேயே
பொதுத் துறையை ஆதரித்துக் கொண்டுள்ளார்கள்

பொதுமக்களுக்கான
நல்வாழ்வுச் சட்டங்களுக்காக
பொதுமக்களை ஒன்றாகத் திரட்டும் பணிக்கு
தங்கள் கொள்கை முரண்பாடுகளும்
சுய நலங்களும் இடம் தரவில்லை
ஆகவே அவர்களால்
அரசுக்கு எதிரான பெருந்திரள்
போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை

ஆகவே பாவம்
பொதுத்துறை ஊழியர்களைத் தூண்டியே
அதைக் காப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்

ஜன நாயகம் காக்க என இவர்கள்
போடுகிற வேஷமெல்லாம்
ஜன நாயகத்தை அழிக்கவும்
தொழிலாளி வர்க சர்வாதிகாரத்தை
வேரூன்ற வைக்கவுமே எனத் தெரிந்த பாமரனுக்கு
இவையெல்லாம் தெரியாமலிருக்க சாத்தியமே இல்லை

ஆகவே அவனும் எப்போதும் போல
தனக்குச் சம்பந்தே இல்லாததைப் போல
இவர்கள் ஆர்ப்பாட்டத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான்

2 comments:

Post a Comment