Thursday, December 16, 2021

கசக்கும் உண்மைகள்..

 ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் தொழிலாளி வர்க்க எதேச்சதிகாரத்தை நிறுவ முயல்வதற்காகவே எப்போதும் பலமான கட்சியினை எதிர்ப்பதும் (தாம் வளர முயற்சிக்காது அப்போது காங்கிரஸ் இப்போது பாரதீய ஜனதா) நாட்டின் மீது உண்மையான அக்கறை கொள்ளாது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்ப்பதற்காகவே  உழைக்கும் வர்க்கத்திடம் ஒரு பதட்டமான மனநிலையை உருவாக்கி அதன் மூலம் தொழிற்சங்கத்தை வளர்த்தெடுப்பதும் (பொது ஜன இயக்கமாக கட்சியை வளர்த்து  போராட இயலாத காரணத்தால்  தொழிற்சங்கங்கள் மூலம் அரசைப் பயமுறுத்த முயல்வதும் குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய காலங்களில்) முற்போக்கு என தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொள்கிற அரசியல் கட்சிகளின்  அரசியல் தந்திரம்..இவர்கள் தந்திரம் புரிந்ததனால்தான் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் இருக்கிற ஊழியர்களின் வாக்குகள் கூட இவர்களுக்குப் பதிவாவதில்லை.(.ஆம் அப்போது டாடா பிர்லா இப்போது அம்பானி வகையறா..அப்போது காங்கிரஸ் இப்போது பா..ஜ.க..அவ்வளவே..கூட்டணிக்கான பேச்சு வார்த்தை என்பது கூட திரைமறைவில் கோடிகள் பெறும் வித்தையே)இதனைப் புரியாத சில நேர்மையானவர்கள்/நியாயமானவர்கள் தியாகம் என்கிற பெயரில் பலிகடா ஆவதே உச்சபட்ச அவலம்..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் இன்னமும் -
உள்ளன...!

Post a Comment