Tuesday, February 15, 2022

அறிந்து வாக்களிப்போம்.

 *ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும் ?*


*நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:*


*🎯 பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை*


*🎯 மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு* 


🎯 குடிநீர் வழங்கல் 


🎯 தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு  


🎯 கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்கு செய்தல் 


🎯 தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல் 


🎯 பிறப்பு/இறப்பு பதிவு 


🎯 மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல். 


🎯 சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல் 


🎯 பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு 


🎯 மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்


🎯 இன்னும் பல...


*இதற்கான வருவாய் ஆதாரங்கள்*: 


🏷️சொத்து வரி

🏷️தொழில் வரி

🏷️கேளிக்கை வரி

🏷️விளம்பர வரி

🏷️பயனீட்டாளர் கட்டணம்

🏷️நிறுவனத்தின் மீதான வரி

🏷️நுழைவு வரி

🏷️வணிக வளாகங்கள் வாடகை

🏷️பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்

🏷️அரசு மானியம்

🏷️மாநில நிதி பகிர்வு

🏷️ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி


*மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா  இல்லை எதிர் கட்சியா ? என்ற கேள்விக்கு இடம் இல்லை...!*


*உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒரு வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த நகராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்!*


*நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து அதனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்*.


*ஆளும் கட்சி வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளரும் வார்டு மக்களால்  நேரடியாக வாக்களித்துதான் தேர்வு செய்யப்படுகிறார்*. 


*தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த  வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை!*


*⁉️உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களப்பணி செய்பவரா?*


*⁉️நீங்க நினைத்த நேரத்தில் அவரை அணுக முடியுமா?*


*⁉️பெரியண்ணன் மனப்பான்மை இல்லாத, சகோதர குணம் உடையவரா?*


*⁉️கறை படியாத கரங்களுக்கு சொந்தகாரரா?*


*⁉️உங்கள் பகுதி கோரிக்கைகளை நகர மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?*


*எனப் பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும்* !!!


*சிந்திப்போம்! வாக்களிப்போம்!*👆


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


*அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்*...


*வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை*...

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் அருமை ஐயா...

Post a Comment