Showing posts with label சிறப்புக் கவிதை -நேரு பிறந்த நாள். Show all posts
Showing posts with label சிறப்புக் கவிதை -நேரு பிறந்த நாள். Show all posts

Thursday, November 12, 2015

நேரு மாமா பிறக்கும் முன்பும்....

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை  
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Wednesday, November 13, 2013

ராஜாவான ரோஜா

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்ததே - அது
நூறு பூவில் அதுவும் ஒன்றாய்
கணக்கில் இருந்ததே

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-உடனே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டதே

பஞ்சம் பசியும் பிணியும் நாட்டில்
விரைந்து பெருகவே-எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்

பஞ்ச சீலக் கொள்கை கண்டு
உலகுக் களித்தாரே-அதனால்
ஐந்து கண்டமும்  புகழும் ஆசிய
ஜோதி ஆனாரே

முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை என்றுணர்ந்து

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்தாரே-நமது
இந்திய நாடு வளர்ந்து சிறக்க
வழியை வகுத்தாரே

குழந்தை மனதைக் கொண்டே அவரும்
வாழ்ந்து வந்ததனால்-என்றும்
குழந்தை நலமே நாட்டின் வளமென
உறுதி கொண்டதனால்

குழந்தை தினமாய் பிறந்த நாளை
சொல்லி மகிழ்ந்தாரே-என்றும்
உலகே விய ந்து   போற்றும்  உன்னதத்
தலைவர் ஆனாரே