Showing posts with label புதுகை பதிவர் திருவிழா 2015 ( 8 ). Show all posts
Showing posts with label புதுகை பதிவர் திருவிழா 2015 ( 8 ). Show all posts

Friday, September 25, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ( 2 )

சிற்றுண்டிச் சாலை மிக விஸ்தாரமாக
குறைந்த பட்சம்300 பேர் தாராளமாக அமர்ந்து
உணவருந்துப் படியாக சிறப்பாக இருந்தது

காலைச் சிற்றுண்டியை பஃபே முறையில்
 உண்ணும்படியாகஏற்பாடு செய்திருந்தார்கள்.
இது போன்ற நிகழ்வுகளில் பிறருடனானத்
தொடர்புக்குஇந்த பஃபே முறைதானே  சிறந்தது

ஏனெனில் நிகழ்ச்சித் துவங்கிவிட்டால் அனைவரும்
 தம்ஒட்டு மொத்த கவனத்தை அதில்தானே
செலுத்த இயலும்

இடையில் இருப்பது மதிய உணவு நேரம்.
அது எப்படியும்வாழை இலை போட்டு நம்
பாரம்பரிய முறையில் இருந்தால்தானே
சிறப்பாக இருக்கச் சாத்தியம்.

அப்போது ஒருவரை ஒருவர்சந்தித்துப் பேச
சாத்தியம் இல்லை எனவே இந்த ஏற்பாடு
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

காலை உணவுக்கு எப்படியும் 150 பேருக்குக்
குறையாமல் இருப்பார்கள்.அவர்கள் ஒரே வரிசையில்
இருந்து உணவு பெற வேண்டுமானால தேவையற்ற
தாமதம்  ஏற்படுத்தும் என்ற நோக்கில் இருபக்கமும்
உணவு தரும்படி ஏற்பாடு செய்திருந்தது
சிறப்பாக இருந்தது

குறிப்பிட்ட உணவை அளவு அதிகம்
உண்ணும்படியாகச் செய்யாமல் பல வகைப்பட்ட
 உணவை அளவு குறைவாக இரசித்து உண்ணும்படியான
நோக்கில் ஆறு ஐயிட்டங்களாக வைத்திருந்தார்கள்.
இனிப்பு மற்றும் காரப் பணியாரம்
இட்டிலி பொங்கல் வடை பூரி என வைத்திருந்தது
வசதியாக இருந்தது.

அவரவர்களுக்குத் தேவையானதை
 பிடித்ததை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளவும்
பிடிக்காததை தவிர்க்கவும்
இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது

தண்ணீர் பாட்டிலை வைக்காது ஹாலின்
 மையப் பகுதியில் சில்வர் டம்ளர்களில் ஒருவர்
நீர் நிரப்பியபடி இருந்தார்

ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் குடி நீர்
பிடித்துக்குடிக்கும்படியாக ஏற்பாடுகளையும்
செய்திருந்தார்கள்

அதைப் போல சிற்றுண்டி பெருவதற்காக
ஒரு புறம்100 எவர்சில்வர் தட்டும் மறுபுறம்
100 பாக்குத் தட்டும் பேப்பர் போட்டு அழகாக
அடுக்கி வைத்திருந்தார்கள்

இரண்டு வகையாக எதற்கு  ?
தண்ணிர் பாட்டில் வைக்காது
 சில்வர் டம்ளர் எதற்கு " என்றேன்

பிளாஸ்டிக் தட்டு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்
உபயோகித்துநாமே பிளாஸ்டிக் கழிவுகளை
உண்டாக்கவேண்டாம என்கிற நோக்கத் தோடும்,
விழா நிகழ்வு முடிந்ததும் சில்வர் ஜக்
டம்ப்ளர் மற்றும் சில்வர் தட்டுகளை ஏதாவது
 ஒரு ஆதரவற்றோர்இல்லத்திற்கு அளித்து விடலாமே ."
என்றார்கள்

அவர்கள் சொல்வதும் மிகச் சரியாகத்தான் இருந்தது
இரண்டு வேளை தண்ணீர்  பாட்டில் செலவும் டம்ளர்
விலையும் ஒன்றாகத்தான் வரும்.தண்ணீர் மட்டும்
வாங்க வேண்டி இருக்கும்.அவ்வளவுதானே

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல வகைகளில்
மாற்றி யோசித்துச் செய்யும் புதுகைப் பதிவர்களை
நினைக்க நினைக்க மனம் மிகப் பூரிப்படைத்தது

அத்துடன் அருமையான சிற்றுண்டி
கொடுத்த திருப்தியிலும் மெல்ல முன்  அரங்கில்
வைத்திருந்த புத்தக ஸ்டாலை நோக்கி
என்  நடையைக் கட்டினேன்


(தொடரும் )