Monday, August 29, 2016

ரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )

                                    காட்சி 6  ( தொடர்ச்சி )

ரஞ்சித் :
(ரஜினி அவர்கள் ஆர்வமாக  ரஞ்சித்தின் பதிலை
எதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...
ரஞ்சித் தொடர்கிறார் )

சார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்
ஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்
அதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்
தனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....

(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு
அவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)

ரஜினி:
(சிறிது நேரம் யோசித்துப் பின்..)

வெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை
ஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா
சொல்ல வேண்டி இருக்கும் இல்லையா

ஒடுக்கப்பட்டவனாக முதல்ல
பின்னால அவனோட எழுச்சி
அதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை
அப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு

இந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா
ஒரு லீட் எடுத்து இணைக்கணும்

கொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா
நாலும் தனித் தனியா திட்டுத்  திட்டா
தெரிய ஆரம்பிச்சுடும்
படம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது

திரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்
கவனமா இருக்கணும்

நீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க
எனக்குச் சந்தேகமில்லை...
இந்த படத்தைப் பொருத்த வரை நான்
கதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை
முழுசா இது டைரக்ரோட படமா
இருக்கணும்னு நினைக்கிறேன்

ஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு
பஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்
கதைக்கு எது தேவையோ அதை மட்டும்
சரியா செஞ்சா போதும் சரியா

ரஞ்சித் :
(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு
பொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்
கொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்

ரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)
பயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா
சந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே  வரும்
ஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்
கவனத்துல வைச்சுச் செய்ங்க...

(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக
முன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )

நமப்ர் ஒன்
வெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்
எப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது
பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்

இரண்டு
மெயின் ரோல் நடிகைகள்
தென் இந்தியாவில் வேண்டாம்
அது பாலிவுட்டா இருக்கட்டும்
அதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா
இருக்கும்

மூணு
தாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம
பாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்
கவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்
பண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்
ஸ்டைலா இருக்கிறவரைப் பாருங்க
பெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்
அது சரியா ஈகுவலா சூட் ஆகாது

நாலு
இதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே
கவனிக்கும்படியா விமர்சிக்கும்படியா ஒரு
கான்ரோவர்ஸியலான பிரச்சனையை லேசா
தொட்டு விடுங்க
அதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த
ஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்
பத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்

ரஞ்சித் இப்போதைக்கு இவ்வளவுதான்
ஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு
தகவல் தாரேன்

நீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க

( பின் தாணுவின் பக்கம் திரும்பி)

என்ன தாணு சார்...
நான் சொன்னதெல்லாம் சரிதானா
நீங்க எதுவும் சொல்லினுமா....

தாணு
சார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச
நான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்
இவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில
இருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து
சூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது
இது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...

ரஜினி
(தாணு பேசுவதைத் தடுத்தபடி  )
தாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது
படம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா

(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)
ரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு
நினைக்கிறேன்..வாங்க கொஞ்சம் ரிலாக்ஸுடா
தோட்டத்தில நடந்திட்டு வரலாம்
அப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்
ஓபனா பேசலாம்

(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து
எழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல
தோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )

Saturday, August 27, 2016

ரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )

                                            காட்சி ( 6 )

ரஜினி:

(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )

வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி

தாணு:
இது எங்க  யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....

ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர்  கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா

தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்

ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...

ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்

ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க

ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின்  ...

சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.

எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்

(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )


முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்

அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...

நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்

அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்

இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்

அதுல மனைவி சாவை  கண் எதிரே
பார்ப்பாரு சார்

இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்

அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்

இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்

அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்

ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்

அதுல வில்லன் உள்ளூர்னா

இதுல வெளி நாட்டுக்காரன் சார்...

அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா

இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...

அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்

இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்

ரஜினி:

(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)

சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா

முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?

(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )

Thursday, August 25, 2016

ரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )

                        காட்சி   ( 4  ) தொடர்ச்சி

(குறைந்தப்  பொழுதெனினும் கனத்துப்
பெய்து விடுகிறக் கோடை மழை போலச்
சுருக்கமாக எனினும்கனமான விஷயத்தை
மிக எளிதாகச் சொல்லிப்போன
ரஜினியை மலைப்புடன் பார்த்தபடி
நெகிழ்ச்சியுடன்..)

ரஞ்சித்:
எவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா
மற்றும் நடிப்புச்  சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்
கிராமத்துல நடக்கிறதைக் கூட  மிகச் சரியா
தெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்

ரஜினி:
(சப்தமாய்ச் சிரித்தபடி )
உச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி
அதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்
சைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்
ஆனா விமானத்தில இருந்து விழுந்தா...
மேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை

(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )

சரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..
என்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க
முடிஞ்சா ஒன் லைனா.....

ரஞ்சித்:
சார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து
உங்களுக்குச் சரியா இருக்கும்படியா
சீரியஸா ஒன்  லைன் யோசித்தேன் சார்

நீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்
திரும்பத் திரும்ப உங்க படம்னா
நினைப்புல வந்து நிக்கிறது
மூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி
முள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட
ஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்
அப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்
காரணம் வில்லத்தனமான  அந்தக் கதா நாயகன்
பாத்திரங்கள் தான் சார்

அந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு
ரொம்பப்பொருத்தமாகவும், ஜனங்களுக்குப்
ரொம்பப் பிடிக்கும்படியாகவும் இருக்கும்ங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

ரஜினி:
நீங்க சொல்றது ரொம்பச் சரி
மனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்
அந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட
பொருத்தம் இருக்காது

என்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி
அதுதான் எனக்கும் மிகச் சரியா
பொருந்தி வருது. ஜனங்களுக்கும்
அதுதான் பிடிச்சுப் போகுது..

ஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண
உடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
ஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி
இந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு
கேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா
சரியா வரும் சார்.

ரஜினி
சரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்
உங்கள் பாணிக்கு......

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
அந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்
சேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா
வந்திரும் சார்...

ரஜினி:
ஓ...ஏற்கெனவே  கொஞ்சம் யோசிச்சிட்டுத்தான்
வந்திருக்கீங்க ரொம்பச் சந்தோஷம்
அதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா ?
அப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க
சரியாய் வரும்...

ரஞ்சித்:
(கொஞ்சம் தயங்கியபடி )
ஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்
வேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்

ரஜினி
அப்படியா...பரவாயில்லையே சொல்லுங்க
டெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்
இந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்
இப்ப வந்ததுதானே...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்
சார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....

ரஜினி
என்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்:
வந்துசார்   ஒரு தோசையை அப்படியே
தலை கீழா திருப்பிப் போடுற  மாதிரி
ஒரு படத்தோடக்கதையை
அப்படியே அடையாளம் தெரியாம
திருப்பிப் போடறோம் சார்
ஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..

ரஜினி:
அப்படியா சும்மா சொல்லுங்க
 நாம தானே பேசறோம் எந்தப் படம்......

ரஞ்சித்:
கமல் சாரோடா நாயகன் சார்

(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ
என அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்
அவரையே உற்றுப் பார்க்கிறார் )

(முற்றிலும் எதிர்பாராத  ஒன்றை
கேள்விப்பட்டவரைப் போல சிறுஅதிர்ச்சியுடன்
சோபாவில் இருந்து எழுந்து மெல்ல
நடக்கத் துவங்குகிறார் )


(தொடரும் )

Wednesday, August 24, 2016

ரஜினி இரஞ்சித் கபாலி 4

                                         காட்சி       ( 4  )     (தொடர்ச்சி )
ரஜினி :

(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர
ஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )

ரஞ்சித் உங்களுக்குத்தான் தெரியுமே...
நாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது
தென் தமிழகம் தான்
அதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை

அங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம
திருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா
வள்ளித் திருமணம்

அங்கெல்லாம் நாடகத்துக்கு குழுக்கள் நிறைய
இருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்
கூப்பிடமாட்டாங்க

போன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த
நாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு
ஒரு லிஸ்ட் எடுப்பாங்க

வள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி
நாரதரா விராலிமலைக் கிட்டு
முருகரா தென்கரைக் கண்ணன்னு
பப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு
ஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்
பண்ணுவாங்க

லிஸ்ட்டைப் பார்த்ததும் சுத்துபத்து
கிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

காரணம் மேடை ஏறுகிறவரை இவங்க
ஒருத்தரை ஒருத்தர் சந்திருச்சுக்கமாட்டாங்க.
 ரிகர்ஸல் எல்லாம் கிடையாது
மேடைதான் முதல் சந்திப்பு

உங்களுக்த்தான் தெரிஞ்சிருக்குமே
வள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்

வள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி
அம்புட்டுத்தான்

மூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்
ஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே

அது இருந்து பார்த்தாத்தான் தெரியும்

(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்கிறார் )

சினிமாவும் அப்படித்தான்

இதுவரை சேராத ஆனா தனித்தனியா
ஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு
படம் பண்ணஆரம்பிச்சா மக்கள்கிட்ட
ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

அப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி
ஊடகத்தால பெருசாக்கி பெருசாக்கி
படத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்

நீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா
ஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு
முன்னால் நிக்குறீங்க

நானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு
இத்தனி வருஷமா ஃபீல்டுல
குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன்

தம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான
தயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்

இந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்
பண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே
ஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்
மக்கள்கிட்டயேயும் ஒரு  எதிர்பார்ப்பு எகிரும்

அதை மட்டும் திருப்திபடுத்தும்படியா
ஒரு படம் பண்ணினா போதும்
தொடர்ந்து  எல்லோரும் உச்சத்தில்
நின்னுடலாம்

அதுக்கு முக்கியமா தேவை.......

(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு
எழுந்துத்  தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்
பின் ரஞ்சித்தை நோக்கி .... )

ஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை
எனக்கும் சரிப்பட்டும் வரும் படியா
உங்களுக்கும் திருப்தி தரும்படியா
என ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும்படியா

(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை
ரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்
ரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்
ரஜினி அவரைத் தடுத்து )

கொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்
ரெஸ்ட் எடுத்துச் சொல்லுங்க
ஒண்ணும் அவசரமில்லை

(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்
மற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்
ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )


தொடரும்

Tuesday, August 23, 2016

ரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )

                                காட்சி 4

(தனது பிரத்யேக அறைக்குள்
ரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்
மிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து
கைக்குலுக்கி வரவேற்கிறார் )

ரஜினி;
வாங்க ரஞ்சித் வாங்க...
ரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி

ரஞ்சித்:
இல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்

 (எனச் சொல்லியிபடித்  தான் கொண்டுவந்திருந்த
 மலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)

உங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்
வேணுமானாலும் காத்திரும்படியா
கோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....

ரஜினி:
நோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்
பாராட்டப்படணும் பாராட்டணும்.அதுதான் நல்லது
அதுதான் பாராட்டிறவன் வளரவும்
பாராட்டப்படறவன் வளரவும் உதவும்
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்
மேடம் போனில் சொன்னாங்களா ?

ரஞ்சித்:
ஆமாம் சார் என்னால நம்பவே முடியலை
அவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில
நான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி
கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்
இப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது
நிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...

ரஜினி
(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )

ரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல
நாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே
இந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்
கொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்
படம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா

ரஞ்சித்
(தன்னை  மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்
மூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)
புரியுது சார் ...சொல்லுங்க சார்

ரஜினி:
நான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்
கொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது
பிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,
அவன் விடலைத்தனம்
எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்
ஒரு நிறைவு  ஏனோ இல்லை

ஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்
கூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை
சொல்லத் தயக்கம் இருந்திருக்கலாம்
பட் வெரி நைஸ்  மூவி

ஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை
வெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை
ஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்
சூழல்பத்தி,அவங்க வாழ்க்கையோட
விளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்
குறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே
ஒரு லாங்க்  ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி
ஒரு ஸைலண்ட் சாட்...அதுவும்  கிரேன்சாட் ...

அந்த ஸாட்டைப் பார்த்ததும்
நிமிர்ந்து உட்கார்ந்தவன்தான்
அப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை

(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான
மௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)

அப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல
ஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு
அந்தப் படம் மட்டும் இல்லாம
தொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா
ஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு
அது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்
கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்

(எனச் சொல்லி கண்களை மூடி
 விஸுவலாக ஏதோ  ஒன்றைப் மனக் கண் முன்
பார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )

நம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது
என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்
ஸோபாவின் நுனிக்கு நகர்கிறார்


தொடரும்

Monday, August 22, 2016

ரஜினி ,தாணு , கபாலி ( 2 )

                                  காட்சி 3

டிரைவர் ஒரு பழக்கூடையுடன் பின் தொடர
பூச்செண்டுடன் ரஜினி அவர்களின் வீட்டில்
நுழையும் தாணு ஹாலில் இருந்து வரவேற்கும்
லதா அவர்களிடம் பழக் கூடையைக் கொடுத்து
நலம் விசாரித்து விட்டுப்   பூச்செண்டுடன்
ரஜினி அவர்கள் இருக்கும் அறைக்குள்
நுழைகிறார் )

 ரஜினி ( தான் அமர்ந்திருந்த ஸோபாவில் இருந்து
            வேகமாய எழுந்து வந்து தாணு அவர்களை
            கட்டிப் பிடித்து வரவேற்றபடி )

            வாங்க தாணுசார் வாங்க..வீட்டில் எல்லோரும்
            சௌக்கியமா ?

தாணு (மலர்ச்செண்டி கையில் கொடுத்தபடி )
             எல்லோரும் நல்ல சௌக்கியம், மேடம் போனில்
             தகவல் சொன்னதும் கூடுதல் சௌக்கியம்
             எல்லாம் தங்கள் சித்தம்....

ரஜினி (சட்டென இடைமறித்தபடி )
              எல்லாம் அவன் சித்தம் என்று சொல்லுங்க
   
தாணு அவர் கூட தானாக எதுவும் செய்ய முடியாதே
              யார் மூலமாகத்தானே முடியும்
              நீங்கள்தான் எங்களுக்கு...

ரஜினி (அவர் வார்த்தையை முடிக்க விடாதபடி )
              திருநெல்வேலிக்கே அல்வாவா...சரி சரி
              அதையெல்லாம் அப்புறம் பேசலாம்
              முதலில் உட்காருங்கள்...

              (என தன் ஸோபா அருகில்  இருக்கும்
              இருக்கையில் அமரும்படி
              சைகைக் காட்டுகிறார்
              இருக்கையின் முன் நுனியில் பௌயமாய்
               தாணு அமர..
              எப்படித் துவங்கலாமென்பது போலச் சிறிது
              நேரம் தரையைப் பார்த்தபடி
              குனிந்து கொண்டிருந்த
              ரஜினி அவர்கள் சட்டென நிமிர்கிறார்..

               ஆம் தாணு மேடம் சொல்லி இருப்பாங்களே
               ஆமாம் நாம இணைஞ்சு ஒரு படம் பண்றோம்
               இதுவரை யாரும் செய்யாத மாதிரி...
               வித்தியாசமா... புதுமாதிரியா....

தாணு   செய்துடும்வோம் சார்..இதுவரை யாரும்
                செலவழிக்காதபடி.. பிரமாண்டமா...

ரஜினி   (இடைமறிக்கிறார் ) என வார்த்தையை நீங்க
               சரியா உள் வாங்கல.. நான் சொல்ற
               வித்தியாசமா...புதுமாதிரியாங்கறது
               செலவழிப்பைப்பத்தி இல்லை
               வரவுப் பத்தி.....

தாணு   (சற்று யோசித்தபடி ) சார் சொல்றது
               கொஞ்சம் புரியலை சார்

ரஜினி   (சோபாவை விட்டு எழுந்து சிறிது நேரம்
              முன் பின்னாக நடக்கிறார். அவர் ஏதோ
              பழைய நினைவுகளின் தொடர்ச்சியாய்ப்
              பேசுவது போலப் பேசுகிறார்...

              ஆமாம் தாணு சார்.  புதுமாதிரியாகத்தான்
              ஒவ்வொரு முறையும் அதிகமா செலவழிச்சு
              லாபம் சேத்து அதிகமா வித்து,அந்த அளவு
              படம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்
             போராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,
             பின்னால நான்பணம் செட்டில் பண்ணி ....

              (சிறிது பெருமூச்சு விட்டுப்பின் தொடர்கிறார்)
              அது இனி வேண்டாம்....முதல்ல செலவுப் பத்தி
              பேசிப்பேசி வரவைப் பத்திப் பேசாததால
              இந்த தடவ வரவைப்பத்தி முதல்ல பேசுவோம்
              அப்புறம் செலவைப் பத்திப்... புரியுதா

             (சட்டென பேசுவதை நிறுத்தி
             தாணுவைப் பார்க்கிறார்
              தாணு ஒன்றும் புரியாது விழிக்கிறார்
             ரஜினி சார் அவருக்கே உரித்தான ஒரு பெரும்
             சிரிப்பைச் சிரித்து விட்டு பின் தொடர்கிறார்

             ஆமாம் இந்தத் தடவை நாம் படத்தை எடுத்து
             டிஸ்டிரிபூட் பண்ணலை, படத்தை விக்கலை
             படத்தை மார்கெட் பண்றோம்
             ப்ரமாண்டமா.. பாலிவுட்ல பண்ற மாதிரி
             ஹாலிவுட்ல பண்ற   மாதிரி ..இப்பப் புரியுதா...

தாணு (தலையை ஆட்டியபடி ) இப்ப கொஞ்சம்
              புரியுது சார்... நான் என்ன செய்யணும்..
              எப்படிச் செய்யனும்னு மட்டும் சொல்லுங்க
              மிகச் சரியாய்ச் செஞ்சிடறேன்

ரஜினி (நிதானமாய் )
             அதை அடுத்த முறை சொல்றேன்
             அதுக்குள்ள படம் சூட்டிங்க
             ஆரம்ப்த்தல இருந்து முடிகிற வரை

             மீடியாவுல பிரமாண்டமா எப்படி
             எப்படிபி படத்தை  பூஸ்ட் பண்றதுங்கிறதை ஒரு
             ப்ராஜெக்ட் ரிப்போர்ட்  மாதிரி...
             புரிஞ்சதா  பிராஜெக்ட்ரிப்போர்ட்  மாதிரி

             அடுத்த வாரத்துக்குள்ள
             தயார் செய்துட்டு வாங்க
             நீங்க அனுபவமான பெரிய ப்ரடூஸர்
             உங்களுக்குச்சொல்லவேண்டியதில்லை
             முதல் ஒரு வாரத்தில் டிக்கெட் கிடைப்பதே
             பெரிய விஷயம் மாதிரி,
             படம் பார்த்துட்டேன் என்கிறது
             மிகப்பெரிய விஷயம் மாதிரி
             ஆமா படம் ரிலீசுக்கு முன்னாலயே
             செலவுப்பணம்கைக்கு வந்துடற மாதிரி...
             புரியுதா தாணு சார்

தாணு (மிகச் சந்தோஷமா )புரியுது சார் ...
             பாலிவுட் முடிஞ்சா
              ஹாலிவுட் ப்ரொமோட்டர்களை வைச்சே
             இதைப்பிரமாண்டமா தயாரிச்சுட்டு
             வாரேன்  சார்

ரஜினி    மகிழ்ச்சி... நீங்க உறுதியா செஞ்சிருவீங்க
             வாழ்த்துக்கள்

             ( எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
             அறையில்  உள்ள செல் போன் மணி யடிக்க
             ரஜினி எடுத்துப் பேசுகிறார்

             (பின் தாணுவின் கைபிடித்துக்  குலுக்கியபடி
           
             அப்ப நீங்க கிளம்புங்க சார்...ரஞ்சித் சாரை
             வரச் சொல்லி இருந்தேன்..
             வந்து காத்திருக்கிறார் போல
             அவரிடமும் ஒரு ரவுண்ட் பேசிடறேன்
             அடுத்த வாரம் உங்க ப்ராஜெக்ட்டோட அவர்
             கொண்டுவர்ற கதை அவுட்லயனோட
             சேர்ந்து பேசுவோம்   சரியா ...

தாணு (பணிவாய்க் குனிந்தபடி )
            ரொம்ப சந்தோஷம் சார்
              நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன் சார்

ரஜினி (மீண்டும் கை குலுக்கியபடி )
             நிச்சமா..நிச்சயமா


             தாணு மெல்ல நடந்து அறையின்
             வாசலைக் கடக்கையில்
             ஏதோ சட்டென நினைவுக்கு வந்ததைப் போல

             தாணு சார் மறக்காம சாப்பிட்டுப்போங்க
             இல்லையானா அவங்க என்னைத்தான்
             கோபிப்பாங்க சரியா.....

தாணு நீங்க சொல்லணுமா சார்
             அவங்களே விடமாட்டாங்க

             எனச் சொல்லியபடி அறைவிட்டு வெளியேற...

                               ( காட்சி  நிறைவு )


(தொடரும்)

Sunday, August 21, 2016

ரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )

                                  காட்சி-1  

(ரஜனி  சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது
அறைக்குள் அதீதச் சிந்தனையுடன்
தன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறார்.

சட்டென நெற்றியைத்
தேய்த்தபடியும்,சடாரெனத் திரும்பியப்படியும்
கண்களை கண்ணாடியின் மிக அருகில்
கொண்டுபோய்விழித்துப் பார்ப்பதும்
ஏதோ அவசியமாய் ,அவசரமாய்
ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்
இருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறது

திடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்
ஓங்கிக் குத்தியபடி நிமிர்கிறார்

கண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது
நமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து
வெளியேறுகிறார் )


               காட்சி -2

( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்
ஊஞ்சலில்  எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி
மிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி
இடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்
வலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்
நிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை
ஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு
அது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )

ரஜினி  (மனைவியைப் பார்த்தபடி )
            எஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ
            சொன்னதையெல்லாம்..
            ஆமாம்..நீ.... சொன்னதையெல்லாம்...

            (என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்
             அவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )

            பின் தன் மனைவியைப்பார்த்தபடி

            ..."அடுத்து ஒரு படம் நடிக்க
             முடிவெடுத்து விட்டேன்
             சந்தோஷந்தானே "

அதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்
ஓடி வந்து  அப்பாவை
அணைத்துக் கொள்கிறார்கள்

மெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த
அவரது துணைவியார்  மெல்ல அவரது கழுத்தைக்
கைகளால் சுற்றியணைத்துக் கொள்கிறார்
.
அந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி
இருந்தவர்..பின் பேசத் துவங்குகிறார்...

           (எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை
            வெறித்து நோக்கியபடி )

           "ஆம் நடிக்கமுடிவெடுத்து விட்டேன்
            ஆனால் எப்போதும் போல இல்லை
            மிக வித்தியாசமாய்... ஆம்  
             மிக மிக வித்தியாசமாய்
            படத்தில் மட்டுமல்ல...எல்லா விதத்திலும்
            ஆம் எல்லா விதத்திலும் ...

           எனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே
           உரித்தா அந்த "ஹா...ஹா.." என்று
          சப்தமாய்ச் சிரிக்கிறார்
            எல்லோரும் என்ன சொல்லப் போகிறாரோ என
            ஆவலுடனும் அதிர்ச்சியுடனும் அவரைப்
             பார்த்தபடித்  திகைத்து நிற்கிறார்கள்

             பின் அவரே தொடர்கிறார்

ரஜினி  ( தன் மனைவியை நோக்கி )
            உடன் தாணுவுக்கும்ரஞ்சித்துக்கும்
            ஒரு போன் போட்டு அவர்களுடன்
           ஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு
           இன்னைக்கே..அதாவது இன்னைக்கே "

           எனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்
           கன்னங்களில்அன்பாய்த் தட்டியபடி
           எழுந்து செல்கிறார்
         
           லதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்
            காலண்டரைப் பார்க்க அதிலிருந்த
            வியாழக்கிழமைப் பெரிதாகி பெரிதாகி
            திரை மறைக்க காட்சி முடிகிறது