Showing posts with label -ஒரு மாறுதலுக்கு. Show all posts
Showing posts with label -ஒரு மாறுதலுக்கு. Show all posts

Wednesday, April 25, 2018

மட்டுமேயை மட்டும்....

சினிமாவினால் தமிழில்
பிடிக்காத வார்த்தையாய்
பிரபலமாகிப் போன
"மன்னிப்பைக் " கூட
என்னால் மன்னித்து விட முடியுது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
மன்னிக்கவே முடியவில்லை  ( சினிமாவினால் )

அதிகப் பட்சவிலை என்பது
அநியாயக் கொள்ளைதான் என்றாலும்
உணமையைச் சொல்லித் தொலைப்பதால்
அதைக் கூட
பொறுத்துத் தொலைக்க முடிகிறது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
ஜீரணிக்கவே  முடியவில்லை  (சினிமாவினால் )

ஏதோ மிகக் குறைவான விலையை
மிகக் சரியாய்ச் சொல்வதைப் போல
எம்மை மயக்கிட நினைக்கும்
இந்த "மட்டுமேயை  "
பொருளின் விலைப்பட்டியலில்
கண்டபோதெல்லாம்
எம்மை மயக்க நினைப்பதுபோல்
எம்மை மடையனாக்குவது போல் தெரிவதால்
                                         (சினிமாவினால் )

Sunday, June 25, 2017

முக நூலும் வலைத்தளமும்

திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்

விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப்  போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்

அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது

சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்

எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான்  அவசியமாகப்படுகிறது

(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள்  .சும்மா ஒரு .  தகவலுக்காக  )

Wednesday, April 26, 2017

நடு நவீனத்துவம்

தலைப்புக் கொடுத்திருக்கிறேன்

வாக்கியத்தை
முன் பின்னாய்ப்  பிரித்து
வித்தியாசமாய்
அடுக்கி இருக்கிறேன்

புரட்சி,மானுடம்,வர்க்கம்
இவையெல்லாம்
இருக்கும்படியாய்
கவனம் கொண்டிருக்கிறேன்

தவறியும்
யாப்பமைதி
அமைந்து விடாதபடி
இலக்கணம் தவிர்த்திருக்கிறேன்

கூடுமானவரையில்
எத்தனை முறைப் படித்தாலும்
புரிந்துவிடாதபடி இருக்க
அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன்

மிகக் குறிப்பாய்
சென்றமுறை
நீங்கள்  எழுதியதாய்ச் சொன்னதை
நல்ல கவிதை எனப் புகழ்ந்திருக்கிறேன்

அப்படியும் நீங்கள்
இதை
நல்ல நடு நவீனத்துவக் கவிதையென
ஒப்புக்கொள்ளவில்லையெனில்

உடன் மறுபரிசீலனை
செய்வதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை

நான் கவிதையைச் சொல்லவில்லை

நம் உறவைச்  சொல்கிறேன்

Monday, November 14, 2016

யாருமறிந்த பரம இரகசியம்

வருகிற 19 ஆம் நாள் இடைத்தேர்தல்
நடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளில்
அடியேன் வசிக்கிற திருப்பரங்குன்றம்
தொகுதியும் ஒன்று

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
செய்தியைக் கூட கேட்க முடியாது சுமார்
இருபத்திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வாக்குவித்தியாசத்தில் வென்ற அ.இஅ.தி.மு.க
வேட்பாளர் எஸ் எம் சீனிவேல் அவர்கள்
மரணமடைந்ததால் ஏற்பட்டக் காலியிடத்திற்காக
நடைபெறுகிற இந்த இடைத்தேர்தலின் முடிவு
எப்படி இருக்கும் என பிற மாவட்டங்களில்
இருந்து எனது  நண்பர்கள் தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருப்பதால் இதை
எழுத வேண்டியுள்ளது

பொத்தாம் பொதுவாக எல்லோரும் இடைத்தேர்தல்
என்றால் அதிகார துஸ்பிரயோகம், மற்றும்
பணப்பலம் இவற்றால் ஆளும்கட்சி வெல்லும்
எனச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாலும்
உண்மை அது மட்டும் இல்லை

வேட்பாளர்களைப் பொருத்த மட்டில்
நிஜப் போட்டியுள்ள அஇஅதிமுக மற்றும்
திமுக வேட்பாளர்களில்,

ஏற்கென்வே இந்தத் தொகுதியில்
வென்று தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை
என்கிற கருத்து அஇஅதிமுக வேட்பாளர் குறித்த
எதிர்மறையான  அபிப்பிராயம் உள்ள போதும்,

தி.மு.க  வேட்பாளரைப் பொறுத்தமட்டில் ,
மருத்துவராய் இருந்து தனது சொந்த டிரஸ்ட் மற்றும்
அரிமா சங்கம் முதலானவைகளில் தன்னை
இணைத்துக் கொண்டு ,தொடர்ந்து சேவைகள்
செய்து கொண்டிருக்கிறவர் என்ற போதும்,

, இளையவர் இனியவர்
அணுக எளிதானவர் என்கிற நேர்மைறையான
அபிப்பிராயம்  கொண்டவர்  என்ற போதும்

இந்தத் தொ குதியையே
பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும்,

இந்தத் தொகுதியில் அ.இ அ.தி.மு.க வேட்பாளரே
 அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு
இன்றைய நிலவரப்படி
உள்ளதெனில் அதற்கான முழுமையான காரணம்

பணபலம்,அதிகார துஸ்பிரயோகம் என மட்டும்
எனச் சொல்லிவிட முடியாது

மாறாக அ.இ.அ.தி.முக கட்சித் தலைவர்களின்
மிகச் சரியான தேர்தல் வியூகமும்,
அதற்கேற்றார்ப்போல கட்டுக் கோப்போடு
செயல்படும் தொண்டர்களின் செயல்பாடும் என்றால்
நிச்சயம்அது மிகை இல்லை

கட்சி கடந்து பொது வாக்காளர்களையும்  கவரக் கூடிய
ஆளுங்கட்சிக்கு இணையாக அனைத்து விதத்திலும்
ஈடு கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் கிடைத்தும்
இந்தத் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில்
தோல்வியத் தழுவுமாயின்,

அதற்கான காரணம் அவர்களாகத்தான்
இருக்கமுடியுமே தவிர,
வேறு ஜால்ஜாப்புகள்  எல்லாம்
நிச்சயம் சப்பைக்கட்டுகளே எனக் கொள்ளலாம்

பார்ப்போம்....

Thursday, September 22, 2016

நிழலின் சூட்சுமக் சமிக்ஞைகள்...

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர

வேறு எதை எதையோ
அறிவுறுத்த முயலும்
நிழலில் சமிக்ஞைகள்
எனக்குப்  புரிந்ததில்லை எப்போதும்

நான் பிறக்கப் பிறந்து
என்னையேத் தொடர்ந்து
என்னுடனே மரிக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
ஏனோ புரிந்ததில்லை என்றென்றும்

நான் எப்போதும் போலிருப்பினும்
சிலபோது பின்னே
விஸ்வரூமெடுத்து
சிலபோது
முன்னே மிகச் சுருங்கி
பலசமயம்
கால் மிதிபடக் கிடந்து
இரவில்இருளில்
முற்றாய்ஒடுங்கி

என்னவோ சொல்ல நினைக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
புரிந்ததில்லை எஞ்ஞாளும்

ஈரக்காற்றின் சமிக்ஞை
வெளுக்கும் கிழக்கின் சமிக்ஞை
மலர்மொட்டின் சமிக்ஞை
குழந்தையின் சமிக்ஞை
ஊமையனின் சமிக்ஞை
நாணமுற்றவளின்  சமிக்ஞை
பிற மொழியாளரின் சமிக்ஞை
அனைத்தையும்
புரிந்து கொள்ளக் கூடும் என்னால்

இன்றுவரை
எனக்கான
எனக்கானது மட்டுமே ஆன
என்னை விட்டு நொடியும் விலகாத

என் நிழலின்
பிறச்  சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்
எப்படி முயன்றும்
ஏனோ புரிந்து கொள்ளமுடியவில்லை
இந்த நொடி மட்டும்

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர...

Tuesday, September 20, 2016

தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் சரியாகச்  சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதில் கொண்டு

எழுதாது இருந்து
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
மனம் துணிந்து உளரவிடும் 
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Friday, September 16, 2016

ஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....

ஆலயம் விட்டு
ஆண்டவன்
அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தான்

"எங்கே இவ்வளவு அவசரமாய்.."
என்றேன் அதிர்ச்சியுடன்

"ஆடம்பரமும், ஆரவாரமும்
மிக அதிகமாகிவிட்டது
சகிக்கவில்லை..அதுதான் "
என்றான்

"அப்படியாயின்
மீண்டும் காடு நோக்கி
அல்லது மலை நோக்கி அப்படித்தானே "
என்றேன்

"இல்லையில்லை
அங்கு அமைதி இருக்கும்
அன்பு கிடைக்காது
எனக்கு இரண்டும் வேண்டும் "
என்றான்.

நான் குழம்பி நின்றேன்

பின் காதோரம் இரகசியமாய்..

"ஓலைக் கூரையோ
ஓட்டு வீடோ
ஒட்டுக் குடித்தனமோ
விஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு "என்றபடி
கூட்டத்தினில் மாயமாய்
மறைந்து போனான்

நானும் ஆலயம் விட்டு
அவசரமாய் வெளியேறினேன்

அவன் இல்லாத இடத்தில்
எனக்கும் இனி எப்போதும்
வேலையில்லை என்பதனாலும்..

அவன் வரவுக்காக
என்னையும் என்வீட்டையும்
சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..

Tuesday, September 6, 2016

பிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் ?

மன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள்  ஏ 
அதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு
தலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்

சிற்பத்திற்குகந்த கற்களைத்
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,

சிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,

வடிவமைத்தல்,முதலான அனைத்திற்கும்
அந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்

ஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய
சிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள் 
ஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்
செய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக
சிலைகள் சேதமுறவோ,இறுதி கட்டத்தில்
சிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது
நிச்சயம் அதிகம் உண்டு

அது போன்று தவறுகள் நேரும் போது 
பயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்
சேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு

மூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்
ஆகாது என்பதாலும், 

புதியவர்கள் அதனை உடனடியாக
பிள்ளையாராக மாற்றிவிட்டால் தவறுக்கான
தண்டனையில் இருந்து விலக்களிக்க
உத்திரவாதம் இருந்ததாலும், 

பிள்ளையாராக எந்தச்
சேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது
என்பதாலும் 

புதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்
உடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்
அதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்

எந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்
செய்கிற முதல் சிலை பிள்ளையாராக
இருக்கும் என்பதால்

எந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்

இப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை 
வெளியேற்றுதலையே பிரதானப்
 பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்

எனவே அதனை மக்களாகவே எடுத்துச்
செல்லும் விதமாக

ஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
என பிள்ளையாருக்கான தேவையையும் 
அதிகம் இருக்கும்படியான நம்பிக்கையையும்
உருவாக்கி வைத்திருந்தார்கள்

அனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது
இருக்குமாயின் அதற்கான  கால விரயம்,
 சம்ரதாயம்   அக்கறையின்மைக்குச்
சாத்தியம் என்பதால் கேட்காமலே
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்

காலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்
திருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு
அப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு
திருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்
அருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா
பிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்
நாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட
சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிற
பிள்ளையாரைத்  தவிர மற்ற இடங்களில் இன்னமும்
எங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்
(திருடித்தான் )வைத்துக் கொண்டிருக்கிறோம்

(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது
சுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்
இப்போதுவரை என் நினைவில் இருந்ததால்
அதனை பதிவு செய்துள்ளேன் )

Friday, September 2, 2016

ரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )

                        காட்சி (7  ) தொடர்ச்சி

ரஜினி:
( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை
எடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்
தடுத்து.. )

தாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்
அதையெல்லாம் நீங்க பாத்துக்கங்க
எனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா
சொன்னாப் போதும்....

தாணு
(ஃபைலை மூடி வைத்துவிட்டு...)

சார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி
படம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி
தொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்
பத்திரிக்கைகளுக்குக் கசியவிட்டுத்
தொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி
லைவ்ல இருக்கிறமாதிரிச் செய்யறோம்

இசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்
செய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில
வைச்சே செய்யறோம்

இதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்

ஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற
ஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத
சில வித்தியாசமான விஷயங்களை உங்க
சூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு
நம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை
இதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத
உச்சத்துக்குக் கொண்டு போறோம்...

(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்
ரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து
கவனிக்கத் துவங்குகிறார்கள்...)

சாருக்குத்தேத் தெரியுமே
முன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே
டிஸ்டிபூட்டருக்குப் போனப் போட்டு
படத்தைப் பத்தி மவுத் டாக்
எப்படி இருக்குன்னு கேப்போம்

நாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு
வீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற
வெளம்பரம் மாதிரி வராது

அதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்
ஆகிப்போச்சு.அதுல படஎதிர்பார்ப்பைப்  தூக்கியும்
தாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்

கிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்
பத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி
நம்ம துவக்கி வைச்சாப் போதும்
மத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க

அடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்
ஆரவாரமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறாப்பல
ஏற்பாடு செஞ்சிருவோம்.பனியன்,விளமபரம்
அது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே
பாத்திக்கிடுவாங்க

அதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல
 வெளி ஸ்டேட்ல இருந்து பஸ்
,ஸ்டார் ஹோட்டல் பேக்கேஜோட
நம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்

முன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து
படம் ரிலீஸ் பண்ணுவோம்
இப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி
நமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி
மூலமா ஏற்பாடு பண்றோம்

முன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,
பெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்
இப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே
வரைஞ்சுப் பறக்க விடறோம்

இன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு

அதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு
அந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம
படத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு
என்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல
படத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்

மிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது
தொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க
இதுக்கு முன்ன பண்ணின மாதிரி
அரசுக்கு நெருக்கமானவங்க மூலமாகவே
ரிலீஸுக்கும் ஏற்பாடு பண்றோம்

(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி
 ரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)

ரஜினி
(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )
வெரி நைஸ் ..வெரி நைஸ்...
நான் எதிர்பார்த்தத்துக்கு மேலே
ரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க
தாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப  தாங்க்ஸ்

(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)

தாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்திடுவாரு
அப்படி எதிர்பார்ப்போட வர்றவங்க
 ஏமாறாம சந்தோஷமா ரசிக்கிறமாதிரி
படம் பிடிக்கிறமாதிரி
நாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..

(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை
நோக்கித்  தன் கையை நீட்டுகிறார்)

ரஞ்சித்
(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி
உறுதியளிக்கும் தொனியில்...)

செஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்

(தொடரும் )

Wednesday, August 31, 2016

ரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )

                                      காட்சி  ( 7  )

(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்
போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்
அமரவும்...

(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )

ரஜினி:
தாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு
எவ்வளவோ  மூளையைக் கசக்கி
எவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு
ஒரு படம் பண்றோம்

அப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்
ஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு
யாரும் படம் பண்றதில்ல

(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில
மீடியாவா ஆகட்டும், டிஸ்ட்ரிபூட்டர்களாகட்டும்
கொடுக்கிற ஆண்டி ரியாக்ஸன்
ரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில
ரொம்ப அப்செட் ஆகிட்டேன்

ஆகையால இந்த முறை எப்பவும் போல்
நாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை
எல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்

(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்
இருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்
உற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )

ஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான
பெறுமான விலையை விட  கூடுதலா விக்கணும்னா
அந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை
உருவாக்கி நினைச்ச விலைக்கு
வியாபாரி விக்குறாரோ
அதே  ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்
பயன்படுத்தறோம்

எவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம
டீஸரை மட்டும் பயன்படுத்தமுடியுமோ

எவ்வளவுகெவ்வளவு எல்லா வகையான
மீடியாக்களையும் பயன்படுத்த முடியுமோ

அவ்வளவு பயன்படுத்தி அளவுக்கதிகமான
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல
முதல் வார கலெக்ஸன்னு இல்லாம

படம் வெளிவருவதற்கு முன்னாலேயே
அட்வான்ஸா எவ்வளவு கலெக்ஸன்
பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம்

எவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்
பார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது
ஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி
ஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்
இதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்
செய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி
அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு
வாங்க..)

(.தாணு தன் கை வசம் வைத்திருந்த
ஒரு சூட்கேஸைத் திறந்து சில
ஃபைல்களை வெளியே எடுத்தபடி.....)

தாணு:
சார்  நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு
கொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு
பாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை
வச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது
மாதா மாதம் செய்ய வேண்டியது
படம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது
முதல் நாள் செய்யவேண்டியன்னு
ஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்

கிராமத்துல சின்ன சம்சாரி
எல்லா செலவும் செஞ்சு
கதிர்  பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்
இரண்டு பாய்ச்சலுக்கும்  காசு இல்லாம
படற  கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க
எல்லாம்  இருக்கிற காசையெல்லாம்
தயாரிப்புக்கே செலவழிச்சுட்டு பிரிண்ட்டுக்கும்
விளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்
இங்கே வாடிக்கையாகிப் போச்சுசார்

நாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்
பட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு
பண்றோம் சார்

நிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட   சேர்ந்து  
 செலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்

(எனச் சொல்லி ஒரு ஃபைலை  எடுத்து
மெல்ல இருவர் முன் விரிக்கிறார் )

(தொடரும் )

Monday, August 29, 2016

ரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )

                                    காட்சி 6  ( தொடர்ச்சி )

ரஞ்சித் :
(ரஜினி அவர்கள் ஆர்வமாக  ரஞ்சித்தின் பதிலை
எதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...
ரஞ்சித் தொடர்கிறார் )

சார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்
ஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்
அதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்
தனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....

(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு
அவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)

ரஜினி:
(சிறிது நேரம் யோசித்துப் பின்..)

வெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை
ஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா
சொல்ல வேண்டி இருக்கும் இல்லையா

ஒடுக்கப்பட்டவனாக முதல்ல
பின்னால அவனோட எழுச்சி
அதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை
அப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு

இந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா
ஒரு லீட் எடுத்து இணைக்கணும்

கொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா
நாலும் தனித் தனியா திட்டுத்  திட்டா
தெரிய ஆரம்பிச்சுடும்
படம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது

திரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்
கவனமா இருக்கணும்

நீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க
எனக்குச் சந்தேகமில்லை...
இந்த படத்தைப் பொருத்த வரை நான்
கதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை
முழுசா இது டைரக்ரோட படமா
இருக்கணும்னு நினைக்கிறேன்

ஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு
பஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்
கதைக்கு எது தேவையோ அதை மட்டும்
சரியா செஞ்சா போதும் சரியா

ரஞ்சித் :
(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு
பொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்
கொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்

ரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)
பயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா
சந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே  வரும்
ஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்
கவனத்துல வைச்சுச் செய்ங்க...

(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக
முன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )

நமப்ர் ஒன்
வெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்
எப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது
பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்

இரண்டு
மெயின் ரோல் நடிகைகள்
தென் இந்தியாவில் வேண்டாம்
அது பாலிவுட்டா இருக்கட்டும்
அதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா
இருக்கும்

மூணு
தாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம
பாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்
கவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்
பண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்
ஸ்டைலா இருக்கிறவரைப் பாருங்க
பெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்
அது சரியா ஈகுவலா சூட் ஆகாது

நாலு
இதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே
கவனிக்கும்படியா விமர்சிக்கும்படியா ஒரு
கான்ரோவர்ஸியலான பிரச்சனையை லேசா
தொட்டு விடுங்க
அதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த
ஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்
பத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்

ரஞ்சித் இப்போதைக்கு இவ்வளவுதான்
ஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு
தகவல் தாரேன்

நீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க

( பின் தாணுவின் பக்கம் திரும்பி)

என்ன தாணு சார்...
நான் சொன்னதெல்லாம் சரிதானா
நீங்க எதுவும் சொல்லினுமா....

தாணு
சார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச
நான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்
இவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில
இருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து
சூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது
இது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...

ரஜினி
(தாணு பேசுவதைத் தடுத்தபடி  )
தாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது
படம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா

(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)
ரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு
நினைக்கிறேன்..வாங்க கொஞ்சம் ரிலாக்ஸுடா
தோட்டத்தில நடந்திட்டு வரலாம்
அப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்
ஓபனா பேசலாம்

(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து
எழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல
தோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )

Saturday, August 27, 2016

ரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )

                                            காட்சி ( 6 )

ரஜினி:

(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )

வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி

தாணு:
இது எங்க  யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....

ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர்  கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா

தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்

ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...

ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்

ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க

ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின்  ...

சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.

எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்

(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )


முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்

அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...

நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்

அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்

இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்

அதுல மனைவி சாவை  கண் எதிரே
பார்ப்பாரு சார்

இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்

அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்

இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்

அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்

ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்

அதுல வில்லன் உள்ளூர்னா

இதுல வெளி நாட்டுக்காரன் சார்...

அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா

இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...

அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்

இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்

ரஜினி:

(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)

சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா

முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?

(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )

Thursday, August 25, 2016

ரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )

                        காட்சி   ( 4  ) தொடர்ச்சி

(குறைந்தப்  பொழுதெனினும் கனத்துப்
பெய்து விடுகிறக் கோடை மழை போலச்
சுருக்கமாக எனினும்கனமான விஷயத்தை
மிக எளிதாகச் சொல்லிப்போன
ரஜினியை மலைப்புடன் பார்த்தபடி
நெகிழ்ச்சியுடன்..)

ரஞ்சித்:
எவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா
மற்றும் நடிப்புச்  சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்
கிராமத்துல நடக்கிறதைக் கூட  மிகச் சரியா
தெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்

ரஜினி:
(சப்தமாய்ச் சிரித்தபடி )
உச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி
அதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்
சைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்
ஆனா விமானத்தில இருந்து விழுந்தா...
மேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை

(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )

சரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..
என்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க
முடிஞ்சா ஒன் லைனா.....

ரஞ்சித்:
சார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து
உங்களுக்குச் சரியா இருக்கும்படியா
சீரியஸா ஒன்  லைன் யோசித்தேன் சார்

நீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்
திரும்பத் திரும்ப உங்க படம்னா
நினைப்புல வந்து நிக்கிறது
மூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி
முள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட
ஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்
அப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்
காரணம் வில்லத்தனமான  அந்தக் கதா நாயகன்
பாத்திரங்கள் தான் சார்

அந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு
ரொம்பப்பொருத்தமாகவும், ஜனங்களுக்குப்
ரொம்பப் பிடிக்கும்படியாகவும் இருக்கும்ங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

ரஜினி:
நீங்க சொல்றது ரொம்பச் சரி
மனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்
அந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட
பொருத்தம் இருக்காது

என்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி
அதுதான் எனக்கும் மிகச் சரியா
பொருந்தி வருது. ஜனங்களுக்கும்
அதுதான் பிடிச்சுப் போகுது..

ஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண
உடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
ஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி
இந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு
கேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா
சரியா வரும் சார்.

ரஜினி
சரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்
உங்கள் பாணிக்கு......

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
அந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்
சேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா
வந்திரும் சார்...

ரஜினி:
ஓ...ஏற்கெனவே  கொஞ்சம் யோசிச்சிட்டுத்தான்
வந்திருக்கீங்க ரொம்பச் சந்தோஷம்
அதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா ?
அப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க
சரியாய் வரும்...

ரஞ்சித்:
(கொஞ்சம் தயங்கியபடி )
ஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்
வேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்

ரஜினி
அப்படியா...பரவாயில்லையே சொல்லுங்க
டெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்
இந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்
இப்ப வந்ததுதானே...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்
சார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....

ரஜினி
என்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்:
வந்துசார்   ஒரு தோசையை அப்படியே
தலை கீழா திருப்பிப் போடுற  மாதிரி
ஒரு படத்தோடக்கதையை
அப்படியே அடையாளம் தெரியாம
திருப்பிப் போடறோம் சார்
ஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..

ரஜினி:
அப்படியா சும்மா சொல்லுங்க
 நாம தானே பேசறோம் எந்தப் படம்......

ரஞ்சித்:
கமல் சாரோடா நாயகன் சார்

(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ
என அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்
அவரையே உற்றுப் பார்க்கிறார் )

(முற்றிலும் எதிர்பாராத  ஒன்றை
கேள்விப்பட்டவரைப் போல சிறுஅதிர்ச்சியுடன்
சோபாவில் இருந்து எழுந்து மெல்ல
நடக்கத் துவங்குகிறார் )


(தொடரும் )

Wednesday, August 24, 2016

ரஜினி இரஞ்சித் கபாலி 4

                                         காட்சி       ( 4  )     (தொடர்ச்சி )
ரஜினி :

(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர
ஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )

ரஞ்சித் உங்களுக்குத்தான் தெரியுமே...
நாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது
தென் தமிழகம் தான்
அதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை

அங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம
திருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா
வள்ளித் திருமணம்

அங்கெல்லாம் நாடகத்துக்கு குழுக்கள் நிறைய
இருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்
கூப்பிடமாட்டாங்க

போன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த
நாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு
ஒரு லிஸ்ட் எடுப்பாங்க

வள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி
நாரதரா விராலிமலைக் கிட்டு
முருகரா தென்கரைக் கண்ணன்னு
பப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு
ஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்
பண்ணுவாங்க

லிஸ்ட்டைப் பார்த்ததும் சுத்துபத்து
கிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

காரணம் மேடை ஏறுகிறவரை இவங்க
ஒருத்தரை ஒருத்தர் சந்திருச்சுக்கமாட்டாங்க.
 ரிகர்ஸல் எல்லாம் கிடையாது
மேடைதான் முதல் சந்திப்பு

உங்களுக்த்தான் தெரிஞ்சிருக்குமே
வள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்

வள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி
அம்புட்டுத்தான்

மூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்
ஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே

அது இருந்து பார்த்தாத்தான் தெரியும்

(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்கிறார் )

சினிமாவும் அப்படித்தான்

இதுவரை சேராத ஆனா தனித்தனியா
ஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு
படம் பண்ணஆரம்பிச்சா மக்கள்கிட்ட
ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

அப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி
ஊடகத்தால பெருசாக்கி பெருசாக்கி
படத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்

நீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா
ஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு
முன்னால் நிக்குறீங்க

நானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு
இத்தனி வருஷமா ஃபீல்டுல
குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன்

தம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான
தயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்

இந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்
பண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே
ஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்
மக்கள்கிட்டயேயும் ஒரு  எதிர்பார்ப்பு எகிரும்

அதை மட்டும் திருப்திபடுத்தும்படியா
ஒரு படம் பண்ணினா போதும்
தொடர்ந்து  எல்லோரும் உச்சத்தில்
நின்னுடலாம்

அதுக்கு முக்கியமா தேவை.......

(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு
எழுந்துத்  தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்
பின் ரஞ்சித்தை நோக்கி .... )

ஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை
எனக்கும் சரிப்பட்டும் வரும் படியா
உங்களுக்கும் திருப்தி தரும்படியா
என ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும்படியா

(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை
ரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்
ரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்
ரஜினி அவரைத் தடுத்து )

கொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்
ரெஸ்ட் எடுத்துச் சொல்லுங்க
ஒண்ணும் அவசரமில்லை

(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்
மற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்
ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )


தொடரும்

Monday, August 8, 2016

குளிக்காது பவுடர் அடிக்கிற கதை...

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட்
என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்

 " யார் மாறினாலும்
நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச்
சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது

இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்

முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாகப்  பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

 அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

"மொழி  வளர்ச்சிக்கான
அடிப்படை வளர்ச்சிக்  குறித்துச்  சிந்தியாது
வெற்று மொழிமாற்றம் என்பது
குளிக்காது
பவுடர் அடிக்கிற கதைதான்
அது சிலகாலம் மணக்கலாம்
தொடர்ந்துப்   பயன் தராது "என்றேன்

அவனுக்குப் புரிந்தது போல்
மெல்லத் தலையாட்டினான்

வழக்காடும் மொழியாக
ஆங்கிலமே தொடர
பெயர்ப்  பலகை  மாற்றக்  கோரும்
இவர்கள் என்று இதனைப்
புரிந்து கொள்ளப்  போகிறார்கள்  ?

தமிழ் மொழியை
உண்மையாய்  வளர்க்க
ஆவன  செய்யப் போகிறார்கள் ?

   

Sunday, August 7, 2016

படைப்பும் பயனும்

எந்தப் படைப்பும்
இதுவரை எனக்குப்
பயன்தராதுப் போனதில்லை

அதனால
கையில் கிடைக்கும்
எந்தப் படைப்பையும்
இரசிக்காது இருந்ததில்லை

மிக மிக
மோசமான படைப்பெனில்
நான் எழுத வேண்டிய
அவசியம் சொல்லிப் போகும்

ஓரளவு
இரசிக்கக் கூடிய படைப்பெனில்
நான் தொடர்ந்து எழுத
தைரியம்  தந்துப் போகும்

ஆகச்
சிறந்தப் படைப்பெனில்
என் எழுத்துச் சிறக்க
நல்வழிக் காட்டிப் போகும்

அதனால்
எந்தப் படைப்பையும்
நான் இரசிக்காதும் இருப்பதில்லை

பிரதிபலானாய்
எந்தப் படைப்பும்
எனக்குப் பயன்தராதும்  போவதில்லை

Friday, August 5, 2016

அபுரிக் கவிதைகள்

"அந்த ஜோல்னாக் கவிஞன்
 கூப்பிட்டான்.பூங்காவில் ஒரு கூட்டமாம்
 போகலாமா ? " என்றான் நண்பன்

"எனக்கு இந்த ஜோல்னா,குறுந்தாடி
ஜிப்பா,கவிஞ்ர்களைக் கண்டாலே அலர்ஜி
கொள்கையை நிலை நாட்ட
எப்போதுசட்டையைக் கிழிப்பார்கள்
எனச் சொல்ல முடியாதே "என்றேன்

"இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்
பயப்படாமல் வா " என
இழுத்துப்போனான் நண்பன்

கூட்டம் கூடி இருந்தது
வட்ட வடிவில்
பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்

நாளை மறு நாள்
உலகம் அழியப்போவது போலவும்
அது இவர்களுக்கு மட்டும் தான்
தெரியும் போலவும்
ஏதாவது செய்தாகவேண்டுமே என்கிற
அதீதக் கவலையில் இருப்பது போல்
அனைவரின் முகங்களும் இறுகிக் கிடந்தன

நாங்கள் இருவரும் அமர
வட்டம் கொஞ்சம் நெகிழ்ந்து
எங்களையும் சேர்த்துக் கொண்டது

நாங்களும் முகத்தை இறுக்கிக் கொண்டோம்

ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியைப் போலிருந்தவர்
பேசத் துவங்கினார்

"இது பதினெட்டாவது வாசிப்புக் கூட்டம்
இம்முறையும் ஐம்பது பேருக்கு  கடிதம் போட்டேன்
பதினைந்து பேருடன் போனில் பேசினேன்
பத்து  பேருக்குக் குறையாமல் வந்திருப்பது
நம்பிக்கையூட்டுகிறது

நம் அமைப்புக்குத் தலைவர் எல்லாம் கிடையாது
எல்லோரும் தலைவர்கள்தான்..."
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லித்
தலைமை உரை ஆற்றியப் பின்

"கவிதை வாசிப்பைத்   துவங்கலாமா " எனக்கேட்டு
ஜோல்னாவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்
பிரித்து உரக்கப் படிக்கத் துவங்கினார்.

சிறுவன் மிட்டாயை இரசித்துச் சாப்பிடுவது போல
ஒவ்வொரு வார்த்தையும் இரசித்துப் படித்தார்

கூட்டம் சப்புக் கொட்டியது

எங்களுக்கு இது தமிழ் என்பது புரிந்தது
வார்த்தைகளும் புரிந்தது
அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை

எதற்கு வம்பு என்று நாங்களும்
சப்புக் கொட்டி வைத்தோம்

படித்து முடித்ததும் " இக்கவிதை ஒவ்வொருவருக்கும்
அவரவர் அனுபவம் பொறுத்து
புதுப் புதுப் பொருள் கொடுத்திருக்கும்
எனக்கானதைச் சொல்லி கவிதையை
நீர்த்துப் போகச் செய்ய விருப்பமில்லை "என்றார்

கூட்டமும் கனத்த (" ன "வுக்கு முடிந்தால்
 ஐந்து சுழி கூடப்போட்டுக் கொள்ளலாம் )
மனத்தோடு மௌனமாய் அங்கீகரிக்க
அடுத்தவர் அடுத்தக் கவிதையைப்
 படிக்கத் துவங்கினார்

இப்படியே பத்துப்  பேரும் அர்த்தமே சொல்லாது
படித்து முடிக்கிற நேரத்தில்
முதலில் படித்தவருக்குஅலைபேசியில்
யாரோ பேச,

"நண்பர்களே !மனைவிக்கு இரண்டு நாளாய்
கடும் காய்ச்சல்.நான் கிளம்புகையில்
வயிற்றுப் போக்கும் சேர்ந்து விட்டது
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல
எட்டுக்குள் வருவதாகச் சொல்லி இருந்தேன்
இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் "
எனச் சொல்லியபடி அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினார்

கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை
மிகச் சரியாகச் செய்து விட்டதைப் போலவும்
இனி கவிதைப் பிழைத்துக் கொள்ளும்
என்பதைப் போலவும் அவர் திருப்தியுடன்
சிரித்துச் சென்றார்

கவிதை இவர்களைக் கஷடப்படுத்துகிறதா
அல்லது இவர்கள்  கவிதையை
கஷ் டப்படுத்துகிறார்களா என  எனக்குக்
குழப்பமாக இருந்தது

"இது எந்த மாதிரியான கவிதையில் சேரும்
மரபு தெரியும்  வசன கவிதை,புதுக்கவிதை
ஹைக்கூ மற்றும் சென்ட்ரியூ  கூடத்  தெரியும்
இந்தப் புரியாத கவிதைகள் எதில் சேர்த்தி"
என்றான்  குழப்பத்துடன் நண்பன்

வட்டம் இரண்டாக மூன்றாக ஐந்தாக
உடைந்து தனித்தனியாய்ப் பிரியத் துவங்கியது

"இதன் பேர் அபுரி "என்றேன்

"இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே"

"இது காரணப் பெயர் .புரிய முயற்சி செய்
புரிந்தால் இந்தக் கவிதைகள் போல
சுகம்  தரும்.புரியவில்லையா  ஒன்றும்
பிரச்சனை இல்லை .புரிகிறதா "என்றேன்

நாங்களும் கிளம்பினோம்

(புதிய வார்த்தைத் தந்த  பதிவர்
ஸ்ரீராம் அவர்களுக்கு  நன்றி )


  

Thursday, August 4, 2016

சமைத்தலும் ,படைத்தலும்

என்ன எழுதுவது என
யோசித்துக் கொண்டிருப்பேன் நான்

என்ன சமைக்கலாம்
என யோசித்துக் கொண்டிருப்பாள் மனைவி

மன அறைத் திறந்து
கரு எது சரியாய் வரும் எனத்
தேடத் துவங்குவேன் நான்

குளிர்சாதனப் பெட்டித் திறந்துக்
காய்எது சரியாக இருக்கும் என
தேர்ந்தெடுக்கத் துவங்குவாள் அவள்

என் தேர்வில் கூடுமானவரைக்
 கூறியது கூறாமல் இருக்கக்
கூடுதல் கவனம் இருக்கும்

அவளும் கூடுமானவரையில்
 சமைத்ததுச்  சமைக்காமல் இருக்க
கூடுதல் கவனம் கொள்வாள்

தேடுகையில் எனக்கு
சட்டென ஏதோ ஒன்று கூடுதல்
கவனம்  கொள்ளச் செய்யும்

அது அன்றைய செய்திப்  பொறுத்தோ
பாதித்த நிகழ்வு குறித்தோ இருக்க
 கூடுதல் சாத்தியம் உண்டு

தேடுகையில் அவளுக்கும்
சட்டென ஏதோ ஒன்று
கூடுதல் அக்கறை கொள்ளச் செய்யும்

அது அன்றைய நாள், திதி குறித்தோ
அல்லது உடல் நிலைக் குறித்தோ இருக்க
கூடுதல் சாத்தியம் நிச்சயம்

கரு ஒன்று கிடைக்கும் வரைத்தான்
எனக்குள் ஒரு மதமதப்பு  இருக்கும்

எது என்று முடுவெடுக்கும் வரைத்தான்
அவளுள்ளும் ஒரு மெத்தனம் இருக்கும்

பின் எழுதி முடிக்கும் வரை நான்
வேறெதிலும் கவனம் கொள்ள மாட்டேன்

பின் சமைத்து முடிக்கும் வரை அவளும்
வேறேதிலும் நினைவைத் திருப்பமாட்டாள்

ருசியிலும்  சத்திலும் குறைவிருக்க
அவள்  ஒருபோதும் சம்மதிப்பதில்லை

கருவிலும் எளிமையிலும் குறைவிருக்க
ஒருபோதும் சம்மதிப்பதில்லை  நானும்

 எல்லாவற்றிலும்

உணவது  சமைத்தலும்
கவியது படைத்தலும்
ஒன்றாய் இருந்தபோதும்
தொடர்ந்து நடந்தபோதும்

"ஆயிரம் சொல்லுங்க
எங்க அம்மா கைப்பக்குவம்
எனக்கில்லை  "என்கிற
சலிப்பு அவளிடமும்

"ஆயிரம் கடந்தாலும்
 எழுத்து  இன்னும்  எனக்கு
வசப்படவில்லை "என்னும்
ஆதங்கம் என்னிடமும்

நீங்காது தொடர்வதால் ...

 என்ன எழுதுவது புதிதாய்  என
யோசித்துக் கொண்டிருக்கிறேன்  நான்

என்ன சமைக்கலாம் புதிதாக
என யோசித்துக் கொண்இருக்கிறாள் என்  மனைவி

Monday, August 1, 2016

"உண்மைக்கும் கவிதைக்கும்.....

"உண்மைக்கும்
கவிதைக்கும்
அதிகத் தூரமோ ?

இல்லையெனில்
ஏன் கவிஞனை
பொய்யன் என்கிறார்கள் ? "
என்றாள் அவள்

"இல்லை இல்லை
தன் கூற்றுக்குக்
கொஞ்சம் அழுத்தம் கொடுக்க
சில வார்த்தைகளைச் சேர்ப்பான் அவன்

அது அவனைப்  பொய்யனாக்கி விடுகிறது
மற்றபடிக்  கவிஞர்கள் எல்லாம்
அரிச்சந்திரன் உறவுதான் " என்கிறேன்

கொஞ்சம் யோசிக்கும்
பாவனையில் இருந்த அவள்
"மிகச் சரியாகப் புரியவில்லை " என்றாள்

நான் சிரித்தபடிச் சொன்னேன்

"தங்களின்  இந்த வாக்கியமே
அற்புதக் கவிதைதான்
நீங்கள் சிறந்த கவிஞர்தான் "

"புரியவில்லை " என்றாள்

"புரியவில்லை  என்பது உண்மை
மிகச் சரியாக என்றது கவித்துவம்" என்றேன்

"புரிந்தது " என்றாள் நாணயமாக

Monday, July 11, 2016

முக நூலும் வலைத்தளமும்

.உண்ணுதல் என்கிற
பொது வரையரையில்
விருந்தும் கொறித்தலும்
வேண்டுமானால் ஒன்றாக வரலாம்

ஆனால் உண்மையில்
அவையிரண்டும்
முற்றிலும் வேறுதளத்தவையே

ஆற அமர்ந்து
முன் இலைவிரித்து
வகைவகையாய் வரிசையாய்
பறிமாறியபின்
மெல்ல இரசித்துப் புசிப்பதற்கும்

ஓடத்துவங்கும் பேருந்தில்
ஏற எத்தனிக்கும் பயணியாய்
காலும் மனமும் எங்கோ பரபரக்கக்
கையும் வாயும் சரசமாடுவதற்கும்

நிச்சயம்
வித்தியாசம் உண்டுதானே

ஆம்
இரசித்து உண்போருக்கு
முன்னது

ஆம்
அவசரத்திலும் உண்போருக்கு
பின்னது