Thursday, February 18, 2016

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம்
அலட்சியத்தால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக

புதிராக  துளியும் புரியாதபடி
 சொல்லப்படுபவைகள்தான்
ஆர்வத்தால்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
எவ்வித குழப்பமுமின்றி
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக

நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

5 comments:

மீரா செல்வக்குமார் said...

அற்புதமான தேடலின் வரிகள்..அனுபவம் பேசுகிறது...

வெங்கட் நாகராஜ் said...

த.ம. +1

S.P.SENTHIL KUMAR said...

பலவற்றை தேட வைத்த அருமையான பதிவு!
த ம 3

S.P.SENTHIL KUMAR said...

பலவற்றை தேட வைத்த அருமையான பதிவு!
த ம 3

Unknown said...

அருமையாகவும் அருமை

Post a Comment