Wednesday, April 12, 2017

அட... சாராய சாம்ராஜ்ய மன்னர்களின் அடிவருடிகளே...



அன்று
மதுரைப்  பாண்டிய ராஜனால்
ஈஸ்வரனின் முதுகில் பட்ட அடி
உலகில் உள்ளோர்
அனைவரின் முதுகிலும்
பட்டதாமே

இதை
நாத்திக வாதிகள்
ஒப்புக் கொள்வதில்லை

ஆயினும்
இன்று
திருப்பூர் பாண்டியராஜனால்
ஈஸ்வரியின் கன்னத்தில் விழுந்த அடி

எங்கள்
அனைவரின் இதயத்திலும்
இடியாய் இறங்கியிருக்கிறதே

இதை நினைக்க
அதுவும் கூட
சாத்தியமாயிருக்கச்
சாத்தியமே எனப் படுகிறது எனக்கு

அட...
சாராய சாம்ராஜ்ய மன்னர்களின்
அடிவருடிகளே
அடியைவருடுங்கள்

அழுக்குப்போக
நக்கக் கூடச் செய்யுங்கள்

அதற்காக
அவர்கள் காலே  கூட
 புண்ணாகிவிடும்படி இப்படியா ?

8 comments:

Unknown said...

மனம்பதை பதைக்கிறது.....இந்தக் காட்டுமிராண்டியை அந்த சகோதரி ஈஸ்வரியின் செருப்பையே எடுத்து அடிக்க வேண்டும்...மேலும் இவனின் காவல்துறை சீருடையை கழற்றி பதவி நீக்கம் செய்ய வேண்டும்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காவல் துறையின் களங்கம்

Avargal Unmaigal said...

அந்த் ஊரில் ஆண்களே இல்லையா இன்னும் அந்த போலிஸ் ஆபிசர் நடமாடிக் கொண்டு இருக்கிறாரா என்ன?

திண்டுக்கல் தனபாலன் said...

அசிங்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

அக்ரமம்....அராஜகம்...இதைக் கேள்வி கேட்க யாரும் துணியவில்லையா? நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். நிச்சயமாக மொபைலில் வீடியோ எடுத்திருப்பார்கள். எடுப்பதில் இருக்கும் ஆர்வம்...தட்டிக் கேட்பதில் இல்லையே...

கீதா

G.M Balasubramaniam said...

அவர் மீது காணொளி சாட்சியம் கொண்டு கேஸ் பதிவு செய்ய இயலாதா

KILLERGEE Devakottai said...

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன்

இராய செல்லப்பா said...

கொடுமைகள் தொடர்ந்துகொண்டே இருகின்றன.. தமிழ் புத்தாண்டு மாற்றங்களைக் கொண்டுவருமா?

Post a Comment