Tuesday, April 18, 2017

தண்ணிக்கண்டத்தில் தமிழ் நாடு.....

தமிழ் நாட்டுக்கும்
பக்கத்து மாநிலம்
ரெண்டுக்கும்
தண்ணி தான் பிரச்சனை

இப்போ
தமிழ் நாடு முழுசுக்கும்
குடி தண்ணியும் பிரச்சனை

மூடின
தண்ணிக் கடையைத்
திறக்கறதுலயும்
நாளெல்லாம் பிரச்சனை

கூவத்தூர்ல
"அதுல " கிடந்து எடுத்த
முடிவுலதான்
அரசாட்சிக்கு
பெரும் பிரச்சனை

இப்ப எதுக்கு
இவங்க
தண்ணில  மிதந்து
முடிவெடுக்கப் போறாங்க ?

ஒருவேளை
அவங்களை காப்பாத்திக்கறதுக்காக
வழக்கம்போல
நம்க்குத் "தண்ணிகாட்ட " இருக்குமோ ?

ஆண்டவா
தமிழ் நாட்டை
தண்ணிக் கண்டத்துல இருந்து
காப்பாத்துப்பா

உனக்கு
ஆயிரம் ஆயிரம்
தண்ணிக் குடமெடுத்து
அபிஷேகம் செய்யுறோம்

8 comments:

Unknown said...

அந்த ஆண்டவனாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது போலிருக்கே ஜி :)

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...

KParthasarathi said...

தண்ணி இல்லாம தமிழனால் வாழ முடியுமா?
பொறுத்து பார்ப்போம்.

KILLERGEE Devakottai said...

ஆயிரம் குடமெடுத்து அபிஷேகம் ???
தண்ணீருக்கு எங்கே போவது ???

தி.தமிழ் இளங்கோ said...

வரும் மே மாதம் எப்படி போகும் என்றே தெரியவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

ஆ.!!! ஆயிரம் ஆயிரம் குடமெடுத்து.....அவளவு தண்ணிக்கு எங்க போறது...இப்பவே தண்ணீர்} கஷ்டம்.....ம்ம்ம்

Yarlpavanan said...

"ஆண்டவா
தமிழ் நாட்டை
தண்ணிக் கண்டத்துல இருந்து
காப்பாத்துப்பா" என்ற
வேண்டுதலை வரவேற்கிறேன்.
எல்லாம் காலநிலை மாற்றமே!

Unknown said...

Nothing could be done jee

Post a Comment