Sunday, November 4, 2012

காலமும் வாழ்வும்

ஆற்றின் போங்கில்
படகு போவது அறியாது
படகும் துடுப்பும்
தனக்குக்தான் கட்டுப்பட்டதென
உணர்வுப்பூர்வமாய்
அறிவுப் பூர்வமாய்ச்
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
படகில் பயணிக்கும் இருவர்

மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
அகன்று  விரிந்த பெருவெளி 

20 comments:

செய்தாலி said...

அருமையா சொனீங்க சார்

Matangi Mawley said...

Beautiful finish!

Anonymous said...

ரொம்ப சின்ன கவிதையில வாழ்க்கையோட மிகப் பெரிய தத்துவத்தையே சொல்லீட்டீங்க ஐயா! என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

அற்புதம் ஐயா!

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார். வரிகள் குறைவானாலும் வாழ்வின் மிகப் பெரிய தத்துவத்தை எளிய வரிகளில் வழங்கியுள்ளீர்கள் அய்யா.நன்றி

G.M Balasubramaniam said...


...கையில் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருப்பவர் காலமே நம் கட்டுக்குள் இருப்பதாக எண்ணுவது போல்.....?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை... அருமை...

Seeni said...

arumai ayya..!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை...

ராஜி said...

மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
அகன்று விரிந்த பெருவெளி
>>
அந்த மௌனத்திற்குள ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது ஐயா!

இராஜராஜேஸ்வரி said...

உணர்வுப்பூர்வமாய்
அறிவுப் பூர்வமாய்ச் சண்டையை விட மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிற பெருவெளி கனக்கிறது !

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இந்த மௌனத்தின் வலிமையே பெரிது அல்லவா..
அருமை!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுருக்கமாய் இருந்தாலும் நறுக்கென ஒரு கவிதை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 7

Anonymous said...

Short n Sweet...Shortest ever..if I remember correctly Ramani Sir...

நம்பிக்கைபாண்டியன் said...

அழகியகுட்டிகவிதை

சிகரம் பாரதி said...

Nice poem. Pls visit my site: http://newsigaram.blogspot.com

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மனதைத் தொட்ட வரிகள்..ஐயா

அப்பாதுரை said...

வெளியின் சிரிப்பில் கொஞ்சம் வில்லத்தனம் சேர்த்திருக்கலாமோ?

Post a Comment