Tuesday, April 11, 2017

வானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்...

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகள் எல்லாம்

இப்போது

கோடாரியினைக் கொண்டு
முடிக்கவேண்டி இருப்பது எதனால் ?

சாக்கடை அடைப்பென்றால்
சட்டசபையிலும்

பாதாள சாக்கடை அடைப்பெனில்
பாராளுமன்றத்திலும்

நம் தெரு மதுக்கடை மூடவேண்டுமெனில்
உச்ச நீதி மன்றத்திலும்

முறையிட்டு முடிக்கும்படி
நம் தலையெழுத்து ஆனது ஏன் ?

வேரில்
மண்ணில்
நீரூற்றி
மரம் வளர்க்க நினையாது

இலையில்
கிளையில்
நீரூற்றி
வளர்க்க நினைப்பது போல்

நம்மில்
நம் பகுதியில்
நம் தலைவனைத்
நாமே தேட முயலாது

தலைவர் குடும்பம் மூலம்
பிரபலஸ்தர்களின்  மூலம்
 நம் தலைவர்களைத்  தேடுவதாலா ?

நினைவில் எப்போதும்
நம் பகுதிக்குறித்த
சிந்தனையது
சிறிதும் இல்லாது

ஐ. நா சபைகுறித்தும்
அமெரிக்க ஜனாதிபதி குறித்தும்
அதிகம் பேசி
அறிவாளிபோல் அலட்டி கொள்வதாலா ?

மொத்தத்தில்
அண்ணா சொன்னது போல்

"கூரையேறி
கோழி பிடிக்க இயலாதவன்
வானமேறி
வைகுண்டம் ஏக நினைப்பதுபோல்

வானம் பார்த்து
மண்ணில் நடக்கும்
கற்பனை மனோபாவம்
நம்முள் வளர்ந்துத் தொலைத்ததாலா ?

முன்புபோல் அல்லாது
இப்போதெல்லாம்

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகளை  எல்லாம்

ஏன்

கோடாரியினைக் கொண்டு
வெட்டித்தொலைக்க வேண்டி இருக்கிறது  ?


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் நேரம் தான்... (கெட்ட நேரம்...!)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காலம் தலைகீழாகப் போய்விட்டதல்லவா?

Unknown said...

Kangal irunthum kurudargalaga... Iruka palagivittom... Vilithiru thamila endru soll enna payan....

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாம் காலத்தின் கோலம்....

G.M Balasubramaniam said...

நகத்தால் கீறி முடிக்க முடிந்தால் கோடரி எதற்கு

Post a Comment