Thursday, April 5, 2018

அந்த முறையே கவிதை எனநாம் தெளிவோம்

சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

சொன்ன விதம் நன்று.
இது எல்லாவற்றிற்கும் பொருந்துமோ!

துளசிதரன், கீதா

ஸ்ரீராம். said...

Test.

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்து தெரிந்து புரிந்து கொள் - சிறப்பு...

G.M Balasubramaniam said...

இப்படிப்ப்ரியும்படி சொன்னாலேயே அது கவிதையாகுமா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியானமுறையே

வெங்கட் நாகராஜ் said...

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

Post a Comment