Showing posts with label சர்வ தேச மகளிர் தினம். Show all posts
Showing posts with label சர்வ தேச மகளிர் தினம். Show all posts

Saturday, March 7, 2020

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமயலறையிலும் படுக்கையறையிலும்
சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகம்  என்று                                      புரிந்து  கொள்ளப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப்பெறுவோம்  ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை மாறாக
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

இந்நாள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு மீண்டும்
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

Monday, March 6, 2017

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே

இராகம் என்பது ஆணினமே
தாளம் என்பது பெண்இனமே
இராகமும் தாளமும் இணைந்திருந்தால்
வாழ்வில் என்றும் இன்னிசையே

மேகம் என்பது ஆணினமே
குளிந்தக் காற்றுப் பெண்இனமே
மேகமும் காற்றும் இதையுணர்ந்தால்-
வாழ்வில் என்றும் சுகமழையே

வலிமை என்பதுஆணினமே
மென்மை என்பது பெண்இனமே
வலிமையும் மென்மையும் ஒருங்கிணைந்தால்
வாழ்வில் என்றும் சுகலயமே

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும்
எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே
திண்ணமாய் மனமிதை ஏற்றாலே
சொர்க்கமாய் மாறும் இவ்வுலகே

Monday, March 7, 2016

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமை யலறையிலும்
படுக்கையறையிலும்
சுதந்திரம்  கொடுப்பது போல் கொடுத்து
சுகம் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
அந்தச் சுகத்தை
என்று அறியப்போகிறார்கள் ?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

Saturday, March 7, 2015

சர்வ தேச மகளிர் தினம்

ஒரு அற்புதமான கவிதை  என் 
மெயிலுக்கு   வந்தது
அதைப் பகிர்வதில்  பெரும் 
மகிழ்ச்சி கொள்கிறேன் 
சிலேடைச் சித்தருக்கு  என்
மனமார்ந்த நன்றி    


சர்வ தேச மகளிர் தினம் 

தாயாய்  , தாரமாய் , 
தமக்கையாய் , தாதியாய் 
மகளாய் , மன்னியாய் 
மாமியாராய்  , மருமகளாய் 
தோழியாய் , துணைவியாய் 
பாசமிகு  பாட்டியாய் 
தசாவதாரம் எடுப்பது மகளிரன்றோ 

பசி தீர்க்கும் அன்னமாய் 
நோய் தீர்க்கும் மருந்தாய் 
பொறுமையில் பூமியாய் 
உறவிணைக்கும்   பாலமாய் 
வழிகாட்டும் குருவாய் 
வரமளிக்கும் தெய்வமாய் 
அஷ்டாவதானம் செய்வதும் மகளிரன்றோ 

கலங்கிடும் மனதிற்கு 
கலங்கரை விளக்கமாய் 
விளங்கி கரை சேர்ப்பவர் மகளிரன்றோ  

குத்து விளக்கேற்றி 
குடும்பமே கோயிலாய் 
விளங்கிடச் செய்வது மகளிரன்றோ  

செவிலியர் போலவே 
சேவைகள் செய்வதில் 
சிறந்து விளங்குவோர் மகளிரன்றோ 

பெண்கல்வி எதிர்க்கும் துன்மதியாளரை 
பெண்களை போகப்பொருளாய் நினைப்போரை 
பெண்களை அடிமையென  பேசித் திரிவோரை 
பெண்களால் முடியாதென பிதற்றித் திரிவோரை 
பெண்களி டம் வரதட்சினை கேட்போரை 
பெண்களை எள்ளி நகையாடிடும் பேடிகளை 
நன்முறை அல்லது  வன்முறை கொண்டு 
வரன்முறைப் படுத்திட சூளுரைப்போம் .

உரி மைகள் கொடுப்போம் 
மரியாதை கொடுப்போம் 
உயர்ந்த இடமொன்று 
உள்ளத்தில் கொடுப்போம் 
உலக மகளிர்தின உறுதிமொழி எடுப்போம்  

வாழ்க மகளிர் !          வாளர்க மகளிர் புகழ் !!  

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
8.03.2015