Thursday, August 24, 2017

கணபதி திருவடி அனுதினம் அடிபணி...


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது கனவினி -என்றும் 
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
காணுநீ  தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது  தகர்ந்திடும்  -என்றும் 
நிறைவுதான் எனத்தெளி


(அனைவருக்கும் இனிய  விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்   )

6 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
பிள்ளையாரப்பா எல்லோரையும் காப்பாத்துங்கோ!!! என்னையும்தேன்!!!

திண்டுக்கல் தனபாலன் said...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

KILLERGEE Devakottai said...

கவி அருமை
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

சொந்தமாய் இயற்றிய கவிதை அருமை

கோமதி அரசு said...

கவிதை அருமை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை அருமை! விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்!

Post a Comment