Sunday, September 4, 2016

கணபதி திருவடி



கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இலையினி -தொடர் 
செழுமையே  உனக்கினி 

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உனை  
வலம்வரும்  கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது இலையினி -முழு 
நிறைவுதான் எனத்தெளி


12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

Unknown said...

அருமை

Unknown said...

அருமை

ஸ்ரீராம். said...

விநாயகத் துதி நன்று.

Unknown said...

விநாயகர் துதி அருமை!

கோமதி அரசு said...
This comment has been removed by the author.
கோமதி அரசு said...

விநாயகர் துதி பாடி மகிழ்ந்தேன் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படம் அருமை. பாடல் இனிமை. ஒவ்வொரு வரிகளும் ஒருவித மெட்டுடன் சொல்ல நல்லா இருப்பதுபோல எழுதியுள்ளது தங்களின் தனிச் சிறப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.

இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

நன்றாய் இருக்கிறது வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

அருமை. வாழ்த்துகள்.

sury siva said...

இந்த பாடலை இங்கும் கேட்கலாம்.

Yaathoramani.blogspot.com said...

பாடல் விமோட்சனம் பெற்றது..நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன்.மிக்க நன்றி..சுப்பு சார்

Post a Comment